வலி உண்மையில் நல்லது . நமது உடல் தன்னையே பாதுகாத்துக்கொள்ள ஏற்படுத்திக்கொண்ட ஒரு காப்பு அமைப்பே வலி ஆகும்.
வலி என்ற ஒன்று மட்டும் இல்லையென்றால் ,
1 . தெரியாமல் அடுப்பில் கை வைத்து தீக்காயம் ஏற்பட்டாலும் தெரியாது
2 . கூர்மையான பொருள் குத்தி இரத்தம் வழிந்தாலும் தெரியாது
3 . அடித்தாலும் தெரியாது , அனைத்தாலும் தெரியாது
ஆம்.
வலி என்பது தொடு உணர்ச்சியின் உச்ச நிலை தானே .
வலி எவ்வாறு ஏற்படுகிறது ?
நரம்பு முடிகின்ற நரம்பு முனைகள் மிகவும் நுட்பமானது , சிறு அளவிலான உணர்வுகளைக் கூட மூளைக்கு மின் சமிக்கைகளை அனுப்பி இந்த குறிப்பிட்ட இடத்தில் இந்த அளவில் இவ்வளவு வலி என்று தகவல் அனுப்புகிறது. மூளை அதை புரிந்துக் கொண்டு வலியை உணரச்செய்கிறது .
வலி நல்லதா?
ஆம் . உணமையில் வலிப்பது நல்லது தான். நம் உடல் இறைவனின் மிக உன்னத , நுட்பமான , தானியங்கிக் கொள்ளகூடிய அருமையான படைப்பு . அது நம் உடலில் ( செல்களில் ஏற்படும் அசாதாரண மாறுதல்களை , தீங்கு விளைவிக்ககூடிய மாற்றங்களை வலிப்பதன் மூலமாக கவனத்தை ஈர்த்து அந்த குறைபாட்டை சரி செய்ய தனக்குதானே சொல்லி சரி செய்ய வைக்கிறது.
அதாவது செல் பாதிக்கப்படும்போது Prostaglandins எனப்படும் வேதிப்பொருள் சுரக்கசெய்கிறது . இது செல்லை வீங்கச்செய்கிறது . இந்த வீக்கம் , நரம்பு முனைகளை தூண்டி வலி சமிக்கைகளை மூளைக்கு அனுப்பச்செய்கிறது . இந்த வலியின் அளவு , செல்லின் பாதிப்பையும் சுரக்கப்படும் Prostaglandins அளவையும் பொறுத்தது.
வலி நிவாரணியின் பங்கு:
வலி நல்லது தான் என்றாலும் , வலி தரும் வலி தாங்கிக்கொள்ள முடியாது தான். அதிலிருந்து தப்பிக்க Ibuprofen , Asprin,acetaminophen, naproxen sodium போன்ற NSAIDs (Non-steroidal anti-inflammatory drug ) வலி நிவாரணிகளை உபயோகித்து தப்பித்துக்கொள்கிறோம்.
இவை என்ன செய்கிறதென்றால் , Prostaglandins சுரப்பதை மிகவும் குறைத்துவிடுகிறது .. அதனால் நரம்பு முனைகள் வலியை மூளைக்கு தெரியபடுத்துவதில்லை. அதனால் நாமும் வலியை உணர்வதில்லை .
" வலி போயே போச்சே "
.
கவனிக்கவும்..... செல்லில் ஏற்பட்ட பதிப்பு அப்படியே தான் இருக்கிறது . வலி மட்டும் தன இல்லை. அது நல்லா தான் இருக்கும், ஆனால் நல்லதில்லை ...
எத்தனை வலி மாத்திரைகள் வந்தாலும் வலி நிவாரணிகள் வந்தாலும் காதலால் இதயத்தில் பட்ட வலிகளை மட்டும் மாற்ற முடியாது.....